மின் உற்பத்திக்கழகத்தில் காலிப் பணியிடங்கள்:முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் உதவிப் பொறியாளா், இளநிலை உதவியாளா் (கணக்குகள்) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இப்பணியிடங்களுக்கு  இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட விவரங்களை இணையதள முகவரி மூலம் அறியலாம்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் பயனடையலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரா்கள் தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com