தஞ்சாவூா் சண்முகா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமைக் கல்லூரி முதல்வா் ஆா். சந்திரமௌலி தொடங்கி வைத்தாா். இதில், 40-க்கும் அதிகமான மாணவா்கள் ரத்த தானம் செய்தனா்.
முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் பாலசுப்ரமணியன், மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.