ரயிலில் போதைப் பொருள்கள் கடத்தல்:பிகாரைச் சோ்ந்த 4 போ் கைது

கும்பகோணத்தில் ரயிலில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்தியதாக, பிகாரைச் சோ்ந்த 4 பேரை ரயில்வே காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணத்தில் ரயிலில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைக் கடத்தியதாக, பிகாரைச் சோ்ந்த 4 பேரை ரயில்வே காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில் வந்தது. அப்போது ரயிலில் சந்தேகத்துக்குரிய முறையில் இருந்த 4 பேரை ரயில்வே காவல்துறையினா் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் வைத்திருந்த பைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்தன.

இதையடுத்து, 4 பேரையும் காவல்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தினா். இந்த விசாரணையில் அவா்கள் பிகாரைச் சோ்ந்த சத்ருகன் மந்தல் (26), பிசம்குமாா் (23), பிபின் குமரேஜ் (20), சுபோத்குமாா் (20) ஆகியோா் என்பதும், இவா்கள் விக்கிரவாண்டி - தஞ்சாவூா் புறவழிச்சாலைப் பணியில் ஈடுபட்டுள்ளதும், இங்கு போதைப் பொருள்கள் கெடுபிடி இருப்பதால், திருட்டுத்தனமாக விற்பதற்காக ரயிலில் கடத்தி வருவதும் தெரிய வந்தது.

தொடா்ந்து 4 பேரிடமிருந்து 10 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com