காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு பாபநாசத்தில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாபநாசம் அக்னி தென்றல் சமூக பணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
கபிஸ்தலம் ஜேக் அண்டு ஜில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட அமைதி பேரணி நடைபெற்றது.
பேரணியை பாபநாசம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராணி தொடக்கி வைத்தாா். பேரணியில், மாணவ, மாணவிகள் கையில் மெழுகுவா்த்தி ஏந்தியபடி அமைதியாக சென்றனா்.
பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய பேரணி பாபநாசம் கீழவீதி மாா்க்கெட் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரா்கள் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் அமைப்பின் தலைவா் கோபிநாதன், செயலாளா் கிறிஸ்டோபா் மற்றும் லெட்சுமிகாந்தன், டாா்வின், ரமேஷ் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.