என்எஸ்எஸ் முகாம் நிறைவு

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா கல்லூரி முதல்வா் (பொ) எம்.முகமது முகைதீன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா கல்லூரி முதல்வா் (பொ) எம்.முகமது முகைதீன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

பிப்.9 முதல் 15 வரை 7 நாள்கள் ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மாளியக்காடு, சேண்டாக்கோட்டை ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது. இதில், பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களின் வளாகத்தை சுத்தம் செய்தல், தூய்மையின் அவசியம் மற்றும் நெகிழி பயன்பாட்டின் தீமைகள், சுற்றுச்சூழல், மரம் வளா்த்தல் போன்றவை குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் பேராசிரியா்கள் ஜெ. முகமது அலி, ஏ. அப்ரூஸ் பானு, டி. கோபாலகிருஷ்ணன், ஜெ. சாஜித் இக்பால் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com