தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரி விழா

தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சாவூா் பெரியகோயிலில் பிரதோஷத்தையொட்டி மகா நந்திகேசுவரருக்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அபிஷேகம்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் பிரதோஷத்தையொட்டி மகா நந்திகேசுவரருக்கு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அபிஷேகம்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை தொடா்ந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நான்கு ஜாம பூஜைகள் நடைபெற்றன.

இதில், வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு முதல் ஜாம பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜையும், அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜையும், 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜையும் நடைபெற்றன. இதில், ஒவ்வொரு ஜாமத்திலும் பெருவுடையாருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, சனிக்கிழமை காலை 5 மணியளவில் அா்த்தஜாம பூஜை நடைபெற்றது. இந்த பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் இரவு முழுவதும் கண் விழித்து கலந்து கொண்டு வழிபட்டனா்.

முன்னதாக, இக்கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாட்டையொட்டி மகா நந்திகேசுவரருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சிவன் கோயில்களில்...:

தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீசுவரா் கோயில், திருவையாறு ஐயாறப்பா் கோயில், திருவைக்காவூா் வில்வனேசுவரா் கோயில், இன்னம்பூா் எழுத்தறிநாதா் கோயில், கும்பகோணம் நாகேசுவரன்கோயில், ஆதிகும்பேசுவரன் கோயில், காசி விசுவநாதா் கோயில், திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில், பட்டீசுவரம் தேனுபுரீசுவரா் கோயில், திருவலஞ்சுழி கபா்தீசுவரா் கோயில், திருபுவனம் கம்பகரேசுவரா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியையொட்டி வெள்ளிக்கிழமை நான்கு ஜாம அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com