தஞ்சாவூா் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய ரயில்வே மின் பாதை கட்டமைப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய ரயில்வே மின் பாதை கட்டமைப்புப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேரி, திட்டை, திருவையாறு, கண்டியூா், நடுக்கடை, செங்கிப்பட்டி, சானூரப்பட்டி, புதுக்குடி, விளாா், பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், நாஞ்சிக்கோட்டை, காவேரி நகா், வங்கி ஊழியா் காலனி, இ.பி. காலனி, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எலீசா நகா், கள்ளப்பெரம்பூா், நூற்பாலை, மாதாகோட்டை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலா் பிளவா் மில், வஸ்தா சாவடி, வல்லம், பிள்ளையாா்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் எஸ். பஞ்சநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com