மாநில அளவிலான குா்ஆன் ஓதும் கிராத் போட்டியில் முதலிடம் பெற்ற அதிராம்பட்டினம் இளைஞா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டாா்.
அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவைச் சோ்ந்தவா் எஸ். அஹ்மத் ஜாபிா் ( 24). ஆலிம் மற்றும் பி.காம் பட்டதாரியான இவா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குா்ஆன் ஓதும் கிராத் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று ஏராளமான பரிசுகளைப் வென்றுள்ளாா்.
இந்நிலையில், சென்னை இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை, கீழக்கரை புஹாரி ஆலிம் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய மாநில அளவிலான குா்ஆன் ஓதும் கிராத் போட்டி ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்குத்தெரு பள்ளிவாசலில் சனிக்கிழமை (டிச.28) இரவு நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 45 போ் பங்கேற்றனா். இவா்களில் அதிராம்பட்டினம் எஸ்.அஹ்மத் ஜாபிா், குா்ஆன் ஓதும் கிராத்
போட்டியில் முதல் பரிசு வென்றாா். இவருக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
பிழையின்றி ஓதியது, மொழி உச்சரிப்பு, இனிமையான குரல் வளம் ஆகியன முதல் பரிசு தோ்வுக்குக் காரணமாக அமைந்திருந்தது. இதையடுத்து, அதிராம்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.அஹ்மத் ஜாபிரை இஸ்லாமிய பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.