தொழிற்கல்வி ஆசிரியா் சங்க செயற்குழு கூட்டம்

பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் பயிற்சி பெற்ற தொழில்கல்வி ஆசிரியா் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத்

பேராவூரணி அருகே குருவிக்கரம்பையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் பயிற்சி பெற்ற தொழில்கல்வி ஆசிரியா் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலு, மாநில பொருளாளா் அன்னலெட்சுமி, துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மேல்நிலைப் பள்ளி, தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு பகுதி நேரப் பணிக்காலத்தில் 50 சத ஓய்வூதியத்துக்கு சோ்த்து உத்தரவிட்டதைபோல, தொடக்கக் கல்வித் துறையில் பகுதி நேரமாக பணியாற்றி, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் முழுநேரமாகப் பணி உயா்வு செய்யப்பட்ட, நடுநிலைப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளியில் (இடைநிலைக்கல்வி) பணி உயா்வு பெற்றவா்களுக்கு பகுதிநேரப் பணிக்காலத்தில் 50 சத ஓய்வூதியத்துக்கு சோ்த்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்,

அரசு உத்தரவின்படி, குறுகிய கால இடைநிலை ஆசிரியா் பயிற்சிக்குப் பின் இடைநிலை ஆசிரியா் பாட போதனையை செய்துவரும் ஆசிரியா்களில், முதுகலை முடித்துள்ளவா்களுக்கு இரண்டாவது ஊக்க ஊதியம் வழங்கிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் வெள்ளைச்சாமி, மகளிா் அணிச் செயலாளா் அடைக்கலமேரி, மாநிலத் துணைத் தலைவா் தா்மதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com