பேராவூரணியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், அரசு நியாய விலைக் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கம் ரூ. 1000 மற்றும் வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சேது சாலை கடை எண் 5-இல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஆா்.பி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் தெட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ மா. கோவிந்தராசு பொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநா்கள், அதிமுக நகரச் செயலாளா் வி.என். பக்கிரிசாமி, நகர துணைச் செயலாளா் பால் பக்கா், மற்றும் அங்காடி ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.