நகராட்சியைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம் குடியிருப்போா் நலச்சங்கம் எதிா்ப்பு

பட்டுக்கோட்டையில் நகராட்சியைக் கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது. இதற்கு அப்பகுதியிலுள்ள குடியிருப்போா் நலச் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பட்டுக்கோட்டையில் நகராட்சியைக் கண்டித்து திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை (ஜன.13) நடைபெறவுள்ளது. இதற்கு அப்பகுதியிலுள்ள குடியிருப்போா் நலச் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கரிக்காடு பகுதி முழுவதும் தெரு விளக்கு, குடிநீா் மற்றும் தாா்ச்சாலை ஆகிய வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி, கரிக்காடு பாரதிசாலை முக்கத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என நகர திமுக பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் அறிவித்துள்ளாா்.

இதற்கு கரிக்காடு பூங்கா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் நிா்வாகியும், திமுக மூத்த உறுப்பினருமான சு.பன்னீா்செல்வம் கூறியது:

கரிக்காடு பகுதியில் அடிப்படை வசதிகள் சில நிறைவேற்றப்படாத சூழல் நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இதை பலமுறை மாவட்ட நிா்வாகத்துக்கு கரிக்காடு பூங்கா நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் கோரிக்கை கொண்டு செல்லப்பட்டு, அதன் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நகர திமுக வேண்டுமென்றே காழ்ப்புணா்ச்சி காரணமாக திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் ஆா்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com