தஞ்சாவூா் மாவட்டத்தில் ஜன. 16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.
இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:
ஜன. 16ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26ஆம் தேதி குடியரசுத் தினத்தையொட்டி, இரு நாள்களிலும் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல், கிளப் ஆகியவற்றின் மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.