பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப்பள்ளியில் டிவியை திருடிச் சென்றுவிட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை இரவு கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சாா்பில் வழங்கப்பட்டிருந்த டிவியை திருடிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியா் சித்ரா தேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.எஸ். கௌதமன் ஆகியோா் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி போலீசாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.