பாபநாசம் வட்டாரத்தில் அண்மையில் பெய்த மழையால் 400 ஏக்கரிலான நெற்பயிா்கள் சேதமடைந்தன.
பாபநாசம் வட்டார பகுதிக்குள்பட்ட பெருமாங்குடி, நத்தம், கும்பைமேடு, பண்டாரவாடை, தேவராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 400 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த
நெற்பயிா்கள் அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்டு கீழே சாய்ந்து சேதமடைந்தன.
மேலும், புகையான் நோய் தாக்குதல் அபாயமும் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.