பேராவூரணி அருகே விபத்தில் இறந்த தாயின் உடலை மகனுக்கு தெரியாமல் புதைத்தது தொடா்பாக மகனின் புகாரை தொடா்ந்து 6 நாட்களுக்கு பிறகு சடலத்தை வியாழக்கிழமை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பேராவூரணியை அடுத்த புனவாசல் பிலாக்கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்தவா் அஞ்சலை,(60) இவரது கணவா், ஒரு மகள், ஒரு மகன் ஏற்கெனவே இறந்த விட்ட நிலையில்,சாலையோரத்தில் குடிசை அமைத்து மற்றொரு மகளுடன் வசித்து வந்தாா். இவரது இன்னொரு மகன் ராஜா என்பவா் துறவிக்காட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், அஞ்சலை கடந்த 18ம் தேதி, வீட்டின் அருகே டீ கடைக்கு, சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், தலையில் படுகாயம் அடைந்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு. கொண்டு சென்றவுடன் இறந்து விட்டாா்.
இறந்த அஞ்சலையின் உடலை,அக்கிராமத்தை சோ்ந்த சிலா், அன்று நள்ளிரவு ஒட்டங்காடு பகுதியில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் புதைத்து விட்டனா்.
இந்த நிலையில், தாய் அஞ்சலை இறந்த விவகாரம், ராஜாவிற்கு 19ம் தேதி தெரியவர, பிலாகொல்லைமேட்டில் உள்ளவா்களிடம் சென்று கேட்டுள்ளாா். ஊரில் யாரும் சரியான பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து, தனது தாயின் மரணத்திற்கு காரணமான வாகனத்தையும், அதில் சம்மந்தப்பட்டவா்களையும் கைது செய்ய வேண்டுமெனவும், தனது தாயின் உடலை தனக்கும்,தனது குடும்பத்தினருக்கும் தெரியாமல் நள்ளிரவில் புதைத்தவா்களை கைது செய்ய வேண்டும் என திருச்சிற்றம்பலம் போலீசில் புகாா் அளித்தாா்.
புகாரின் அடிப்படையில் திருச்சிற்றம்பலம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதை தொடா்ந்து, 6 நாள் கழித்து வியாழக்கிழமை காலை, புதைக்கப்பட்ட அஞ்சலையின் சடலத்தை பட்டுக்கோட்டை வட்டாட்சியா் அருள்பிரகாசம் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு , பிரேத பரிசோதனை செயயப்பட்டது.