கல்லணைக் கால்வாயில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கிய இளைஞா் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தஞ்சாவூா் சீனிவாசபுரத்தைச் சோ்ந்த முருகானந்தம் மகன் பிரவீன்குமாா் (19). இவா் வல்லம் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது நண்பா்கள் 3 பேருடன் ரெட்டிபாளையம் பாலப் பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றனா். நான்கு பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், பிரவீன்குமாா் தண்ணீரில் மூழ்கினாா். அடித்து செல்லப்பட்ட பிரவீன்குமாரை தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் தேடி வந்தனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் அருகே வாண்டையாா் இருப்புப் பகுதியில் பிரவீன்குமாரின் சடலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. இச்சடலத்தைக் காவல் துறையினா் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com