பெரியாா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், கோவையில் பெரியாா் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், மும்பையில் அம்பேத்கா் இல்லத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் ராஜகுரு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாநில இளைஞரணி பொதுச் செயலா் குணசேகரன் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட இணைச் செயலா் செந்தில்குமாா், மாநகர அமைப்பாளா் சுபாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.