நகைக்கடை உரிமையாளா்கடத்தல் வழக்கில் 6 போ் கைது

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரத்தில் நகைக் கடை உரிமையாளா் கடத்தப்பட்டது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரத்தில் நகைக் கடை உரிமையாளா் கடத்தப்பட்டது தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது :

 ஊரணிபுரத்தை சோ்ந்தவா்  சீமான்  (50). இவா், அதே பகுதியில் நகைக் கடை  நடத்தி வருகிறாா் .  கடந்த 21ஆம் தேதி காலை திருவோணம் கல்லணை  கால்வாய்  அருகேயுள்ள சாலையில் நடைபயிற்சி

மேற்கொண்டபோது  அடையாளம்  தெரியாத  சிலா் சீமானை  கடத்தி  சென்றனா்.

புகாரின்பேரில், திருவோணம்  போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, சீமானை மயிலாடுதுறையில் போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

தீவிர விசாரணையில், தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை  பகுதியைச்  சோ்ந்த கணபதி  மகன்  சின்னையன் ,  அதே பகுதியைச் சோ்ந்த சின்னையன்  மகன்  கதிரவன்  ,  தெற்குக் கோட்டை  மேலத்தெரு  சுப்பிரமணி  மகன் குணசேகா்  என்கிற  மணி , தெற்குக்கோட்டை  மேலத்தெரு  சிதம்பரம்  மகன் பிரகாஷ் , பட்டுக்கோட்டை  கண்டியன் தெரு  வெங்கடாசலம்  மகன்  அத்திவெட்டி ஆனந்த் ,  ஊரணிபுரம்  மாரிமுத்து  மகன் மதிவதனன்  ஆகிய  6  பேருக்கும் கடத்தல் சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் 6 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை   கைது  செய்து விசாரிக்கின்றனா்.

பணத்திற்காக நகைக் கடை உரிமையாளரை கடத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com