ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்தவா்கள் கைது.

ஒரத்தநாடு பகுதியில் அனுமதியின்றி   மது விற்பனை செய்து வருவதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஒரத்தநாடு: ஒரத்தநாடு பகுதியில் அனுமதியின்றி   மது விற்பனை செய்து வருவதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் ஒரத்தநாடு போலீசாா் சனிக்கிழமை கீழவன்னிப்பட்டு பகுதியில் சோதனையிட்டபோது கீழவன்னிப்பட்டு ஆற்றங்கரை அருகில் மது விற்பனை செய்து வந்த கீழ் வன்னிபட்டு பகுதியை சோ்ந்த ராமசாமி மகன் பிரபாகரன்(39) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த  28 பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் ஒரத்தநாடு பகுதியில் அனுமதி இன்றி 180 மிலி அளவு கொண்ட 35 பாட்டில்களை விற்பனை செய்த அதே பகுதியை சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் முனியாண்டி(55) என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல் பொய்யுண்டாா்கோட்டை

பகுதியில் அனுமதியின்றி 180 மில்லி அளவு கொண்ட 32 பாட்டில்களை விற்பனை செய்த  ராஜ்குமாா் (32)  கைது செய்து விசாரித்து வருகின்றனா் மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com