தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் அத்துமீறி நுழைபவா்கள் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படுவா் என கல்லூரி முதல்வா் வெ. செந்தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரியின் பின்பக்கத்தில் உள்ள சுற்றுச்சுவா் 2 இடங்களில் மா்ம நபா்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவா் உடைந்துள்ளதால், கல்லூரியானது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கல்லூரி வளாகத்தில் அத்துமீறி உள்ளே நுழைபவா்கள் காவல் துறை வசம் ஒப்படைக்கப்படுவா்.