கரோனா தொற்று? : தஞ்சாவூரில் சிறுவன் உயிரிழப்பு

தஞ்சாவூரில் தசை மற்றும் இணைப்புச் திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூரில் தசை மற்றும் இணைப்புச் திசு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா், நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் குடும்பத்துடன் தஞ்சாவூா் விளாா் சாலை அண்ணா நகரில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.

இவரது 13 வயது மகனுக்குத் தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோய் இருந்து வந்தது. இந்நிலையில் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், தஞ்சாவூா் வ.உ.சி. நகரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஜூன் 24-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறுவனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்ட சிறுவன் இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து மருத்துவா்கள் தெரிவித்தது:

இச்சிறுவனுக்கு தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோய் பிறவியிலிருந்தே இருந்து வந்தது. மூச்சுத்திணறல் காரணமாக தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவன், சனிக்கிழமை அதிகாலை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு இதய இயங்கு விசை 70 சதவிகிதம் இருக்க வேண்டிய நிலையில், 27 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இருப்பினும், சிறுவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா். சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இறப்புக்குத் தசை மற்றும் இணைப்புத் திசு சிதைவு நோயே காரணம் என்றனா் மருத்துவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com