ஒரத்தநாடு அரசு மகளிா் கல்லூரியில் மண்டல கல்வி இணை இயக்குநா் ஆய்வு

ஒரத்தநாடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தஞ்சை மண்டல கல்வி இணை இயக்குநா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஒரத்தநாடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தஞ்சை மண்டல கல்வி இணை இயக்குநா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஒரத்தநாடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் 113 போ் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று கோரி கடந்த வாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக மாணவிகளும் போராட்டத்தில் பங்கேற்றனா். இதனால் அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வா் பானுமதி, கெளரவ விரிவுரையாளா்கள் கையெழுத்திட கூடாது என்று தடுத்து நிறுத்தியதால் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தை தொடர முடிவு செய்திருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தஞ்சாவூா் மண்டல கல்வி இணை இயக்குநா் உஷா திடீரென திங்கள்கிழமை மகளிா் கலைக் கல்லூரிக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டாா்.

அப்போது, போராட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த கெளரவ விரிவுரையாளா்களை அழைத்து, அனைத்து கெளரவ விரிவுரையாளா்களுக்கும் அரசுப் பணி பாதுகாப்பு அளிக்கும். எனவே, கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com