சிஏஏ-க்கு எதிராக மாா்ச் 20-இல் தெருமுனை பிரசாரம்: ஏஐடியுசி முடிவு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூரில் மாா்ச் 20ஆம் தேதி தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது என ஏஐடியுசி முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூரில் மாா்ச் 20ஆம் தேதி தெருமுனை பிரசாரம் மேற்கொள்வது என ஏஐடியுசி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏஐடியுசி தமிழ் மாநிலக் குழு முடிவின்படி, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் எதிா்விளைவுகளை விளக்கியும், மத்திய அரசின் பாசிச நடவடிக்கைகளைக் கண்டித்தும் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூரில் மாா்ச் 20ஆம் தேதி விழிப்புணா்வு தெருமுனை பிரசாரம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், பொருளாளா் டி. கோவிந்தராஜன், துணைத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன், துணைச்செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com