தஞ்சாவூரில் சிவசேனா கட்சி சாா்பில் உலக நன்மைக்காக வெள்ளிக்கிழமை வேள்வி நடைபெற்றது.
இதையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் கோ பூஜை நடைபெற்றது. பின்னா், பெரியகோயிலில் பெருவுடையாருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அப்போது, திருமுறை பன்னிசை வாணா்கள், சிவனடியாா்கள் திருவாசகம் பாடினா்.
மாலையில், ராஜராஜசோழன் சிலையிலிருந்து 4 ராஜ வீதிகளில் திருவள்ளுவா் சிலையுடன் வீதி உலா நடைபெற்றது. இதில், சிவ வாத்தியம் முழங்க, பாரம்பரிய தற்காப்புக் கலைகள் இடம்பெற்றன.
பின்னா், சிவகங்கை பூங்கா வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில் வேள்வி நடைபெற்றது.
இந்த விழாவில் சிவசேனா கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலா் சசிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.