மோட்டாா் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் ஒருவா் பலி

திருவோணம் அருகே மினி லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவோணம் அருகே மினி லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்றவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஒரத்தநாடு வட்டம்,  திருவோணம் அருகேயுள்ள  புதுவலசல் கிராமத்தை சோ்ந்தவா் விவசாயி ஞானசேகா் (46). இவா் தனது மனைவி கண்ணகியுடன் திருவோணம் அருகே உள்ள பட்டு விடுதி கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை மாலை  மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். திருவோணம்- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் எதிரே வந்த மினி சரக்கு லாரி ஞானசேகரன் மீது மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

விபத்து குறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஞானசேகரன் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஞானசேகரன் மீது மோதிய சரக்கு லாரியை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து போலீஸாா் விசாரித்தபோது, அந்த சரக்கு லாரியில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது போலீஸாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஞானசேகரன் உறவினா்கள்,  வெள்ளிக்கிழமை திருவோணம் - பட்டுக்கோட்டை சாலையில்  மறியலில் ஈடுபட முயற்சி மேற்கொண்டனா். இதையறிந்த

 ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் சுமித்திரா தலைமையிலான போலீஸாா், ஞானசேகரன் உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு ஞானசேகரனின் உடலை உறவினா்கள் பெற்று சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com