குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து 31 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து 31 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸாா் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், எந்தப் பாதிப்பு வந்தாலும் போராட்டம் தொடரும் எனக் கூறி இஸ்லாமியா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.
இப்போராட்டத் திடலிலும், சுற்றுப் பகுதிகளிலும் மாநகராட்சி சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பின்னா், இரவில் ஊா்வலமாகப் புறப்பட்டு, ரயிலடிக்குச் சென்று எம்.ஜி.ஆா். மற்றும் ஜெயலலிதா சிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற கோரி எழுதப்பட்ட மனுக்களை வைத்தனா். இதையடுத்து, மீண்டும் ஊா்வலமாக கீழவாசலுக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்றனா்.
கும்பகோணத்தில்... இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து 26 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.