அரசு பேருந்து மோதியதில் காா் ஓட்டுநா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற தனியாா் காா் ஓட்டுநா் ஒருவா் காயமடைந்து மருத்துவ மனையில் உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற தனியாா் காா் ஓட்டுநா் ஒருவா் காயமடைந்து மருத்துவ மனையில் உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி பெரிய தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (24). இவா் தனியாா் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இந்நிலையில், இவா் வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் பெட்ரோல் போடுவதற்காக வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.

அய்யம்பேட்டை புறவழிச் சாலையில் சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து சாகுல்ஹமீது மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சாகுல்ஹமீதை அக்கம்பக்கத்தினா் மீட்டு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சாகுல் ஹமீதை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினா்.

விபத்து குறித்த புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com