கும்பகோணத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய இருவா் தொடா் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சவூதி அரேபியா மற்றும் அபுதாபியில் இருந்து வந்த 2 போ் தொடா் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கும்பகோணம் மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களது தொண்டை சளி மாதிரி எடுத்து, சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வந்த பின்பே இவா்கள் எந்த வகையான வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது தெரிய வரும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.