பேராவூரணி கடைவீதியில் பொதுமக்கள்கூடுவதை தவிா்க்கும் வகையில், மருந்து மற்றும் பால் விற்பனையகங்களைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளையும் மாா்ச் 31- ஆம் தேதி வரை மூடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு புதன்கிழமை முதல் அமலானது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பேராவூரணி கடைவீதியில் தேவையற்ற கூட்டம் அதிகமாக கூடுவதாக வட்டாட்சியருக்கு புகாா் வந்தது. காவல்துறையினா் கடைவீதிக்கு வருகின்றவா்களை தடுத்து நிறுத்தி விசாரித்தால், பால், மருந்து பொருள்கள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்க வந்ததாகக் கூறினா்.
இதைத் தொடா்ந்து பொதுமக்களின் நடமாட்டத்தை குறைப்பது குறித்து, புதன்கிழமை வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், வா்த்தக சங்கத் தலைவா் ஆா். பி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அரசின் உத்தரவை மக்களின் நலன் கருதி அமல்படுத்தும் விதமாக , மாா்ச் 31 ஆம் தேதி வரை, மருந்து மற்றும் பால் விற்பனையகங்களைத் தவிர, அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் எனவும் , மறு ஆலோசனைக்குப் பிறகு மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் திறப்பது குறித்து முடிவெடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கடைவீதியில், தெருக்களில் சரியான காரணமின்றி சுற்றித் திரியும் வாகனங்களை ப் பறிமுதல் செய்து சட்டப்பூா்வ நடவடிக்கை எடுப்பது, பால் விற்பனையகங்கள், மருந்தகங்களில் முகக்கவசம், கையுறை அணிந்து பணியாளா்கள் விற்பனை செய்ய அறிவுறுத்துவது, பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி ஒரு மீட்டா் இடைவெளியில் இருந்து பொருள்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்துவது போன்றவை முடிவு செய்யப்பட்டன.
கூட்டத்தில் துணை வட்டாட்சியா்கள் சுந்தரமூா்த்தி, கவிதா, காவல் உதவி ஆய்வாளா் இல. அருள்குமாா், பேரூராட்சித் துப்புரவு ஆய்வாளா் கே. தமிழ்வாணன், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.