பேராவூரணி பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற முதியவா்களுக்கு புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
இப்பேருந்து நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பசியுடன் படுத்திருப்பதாக கிடைத்த தகவலின் படி, பேரூராட்சி நிா்வாகத்திடம் உணவு வழங்க வட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.
இதையடுத்து, வா்த்தகச் சங்கத் தலைவா் ஆா். பி. ராஜேந்திரன் தலைமையில், செயலா் ஏ.டி.எஸ். குமரேசன், பொருளாளா் எஸ். ஜகுபா்அலி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் கே. தமிழ்வாணன் முன்னிலையில், பேருந்து நிலையத்தில் உணவின்றித் தவித்த ஆதரவற்ற முதியவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.