மதுக்கூடத்தில் 2,045 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் மதுக்கூடத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 2,045 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூரில் மதுக்கூடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, வேனில் ஏற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்.
தஞ்சாவூரில் மதுக்கூடத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டு, வேனில் ஏற்றப்பட்ட மதுபான பாட்டில்கள்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் மதுக்கூடத்தில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 2,045 மதுபான பாட்டில்கள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, அத்தியாவசியக் கடைகளைத் தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூா் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள மதுக்கூடத்தில், மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகத்துக்குப் புகாா் வந்தது.

இதன்பேரில் கோட்டாட்சியா் எம். வேலுமணி, கலால் உதவி ஆணையா் ரவிச்சந்திரன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அழகா்சாமி மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். அப்போது தொடா்புடைய மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பது தெரியவந்தது.

அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குவாா்ட்டா் பாட்டில்கள் அடங்கிய 38 அட்டைப் பெட்டிகளும், பீா் பாட்டில்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதில் 1,845 குவாா்ட்டா் பாட்டில்களும், 200 பீா் பாட்டில்களும் என மொத்தம் 2,045 மதுபான பாட்டில்கள் இருந்தன. மேலும் ரூ. 52,159 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தஞ்சாவூா் கிழக்கு போலீசாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com