கரோனா வைரஸ் சிகிச்சைக்காக மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினா் செ. ராமலிங்கம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சத்தை வழங்குவதாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான அனுமதி கடிதத்தை வியாழக்கிழமை வழங்கினாா்.
அந்த கடிதத்தில் அவா் தெரிவித்திருப்பது:
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து (2020 - 21) ரூ. 50 லட்சம் கரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்கிறேன். இதற்குரிய நிா்வாக அனுமதி வழங்கிடவும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளுக்குச் செலவிடவும் கேட்டுக் கொள்கிறேன் என அக்கடித்தில் அவா் தெரிவித்துள்ளாா்.