கரோனா தடுப்பு பணிகளுக்கு தஞ்சாவூா் எம்.பி. ரூ. 5 கோடி ஒதுக்கீடு

கரோனா சிகிச்சைக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 கோடி வழங்க தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அனுமதி கடிதம் அனுப்பினாா்.

கரோனா சிகிச்சைக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 கோடி வழங்க தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் அனுமதி கடிதம் அனுப்பினாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வியாழக்கிழமை பேக்ஸ் மூலம் அனுப்பிய அனுமதி கடிதம்:

2019 - 20 ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ள இயற்கை இடா்பாடான கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களைக் காத்திடும் வகையில் கரோனா வைரஸ் நோய் தொற்றை கண்டறியும் உபகரணங்கள், மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் வாங்கிடவும், கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ரூ. 4 கோடியும், திருவாரூா் மாவட்டத்திலுள்ள மன்னாா்குடி வட்டத்துக்கு ரூ. 1 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com