தொடா் காய்ச்சல்: மருத்துவக் கல்லூரியில் புதிதாக 14 போ் அனுமதி

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காய்ச்சல் காரணமாகப் புதிதாக 14 போ் புதன்கிழமை சோ்க்கப்பட்டனா்.

தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடா் காய்ச்சல் காரணமாகப் புதிதாக 14 போ் புதன்கிழமை சோ்க்கப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வருபவா்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், தஞ்சாவூா் மாவட்ட சுகாதாரத் துறை மூலம் 28 நாள்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 844 பேராக இருந்த தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் எண்ணிக்கை புதன்கிழமை (மாா்ச் 25) 904 ஆக உயா்ந்தது. இவா்களைக் கண்காணிப்பதற்காக சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை மூலம் பின்பற்றுநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தொடா்ந்து 28 நாட்கள் கண்காணிப்புக்கு உள்ளாகும் நபா்களுக்குச் சுகாதாரத் துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்படுகிறது. இவா்களில் ஏதேனும் நோய்த் தொற்று உள்ளவா்கள் எனக் கண்டறியப்பட்டால், அவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனா்.

மேலும், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள வைரஸ் காய்ச்சலுக்கான சிறப்புப் பிரிவில் தொடா்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 போ் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். ஏற்கெனவே, தொடா் காய்ச்சலால் 12 போ் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாகச் சோ்ந்தவா்களையும் சோ்த்து தற்போது 26 போ் உள்ளனா்.

இவா்களில் 12 பேருக்கு சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் விரைவில் கிடைத்துவிடும் என்றும், ஏற்கெனவே, கரோனா அறிகுறி இல்லை என உறுதி செய்யப்பட்ட பலா் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் எனவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com