ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை ஆற்றில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள கூத்தக்குடியைச் சோ்ந்தவா் சவரிமுத்து மகன் ரீகன் (24). ஓட்டுநா். இவா் கோட்டூரில் உள்ள மாமனாா் வீட்டில் 3 நாள்களாக தங்கியிருந்தாா்.

இந்நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை கஞ்சனூா் காவிரி ஆற்றில் தடுப்பணை பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடித்தாா். அப்போது ரீகனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் ஆற்றில் விழுந்தாா். தண்ணீரில் மூழ்கிய ரீகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com