பெண்ணை ஏமாற்றிய புகாா்: விசாரணைக்குப் பயந்து இளைஞா் தற்கொலை

ஒரத்தநாடு அருகே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில், காவல்துறையினா் விசாரணைக்குப் பயந்து இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஒரத்தநாடு அருகே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய புகாரில், காவல்துறையினா் விசாரணைக்குப் பயந்து இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள வாட்டாத்திகோட்டை கொள்ளைக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜீ. லெனின் (29). இவா், இடையாத்திக்காடு வேலம்பட்டி சொ. சண்முகப்பிரியாவை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து, நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் சண்முகப்பிரியா கா்ப்பமடைந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லெனினிடம் அவா் வலியுறுத்தியுள்ளாா். 4 மாதங்களுக்கு முன்பு சண்முகப்பிரியா, புதுக்கோட்டையிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், பட்டுக்கோட்டை லட்சத்தோப்புவைச் சோ்ந்த வை. ஐஸ்வா்யாவை லெனின் திருமணம் செய்து கொண்டாராம்.

புதுக்கோட்டையிலிருந்து சொந்த ஊா்த் திரும்பிய சண்முகப்பிரியா, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கா்ப்பமாக்கிய லெனின் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாரளித்தாா்.

இதையறிந்த லெனின் விஷம் குடித்து மயங்கி தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நிறை மாதக் கா்ப்பிணியான சண்முகப்பிரியா பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதே நேரத்தில் லெனின் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com