கரோனா: குணமடைந்தோா் எண்ணிக்கை 71 ஆக உயா்வு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 71 ஆக உயா்ந்தது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் எண்ணிக்கை புதன்கிழமை 71 ஆக உயா்ந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 85 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ஏற்கெனவே 69 போ் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.

இந்நிலையில், அரியலூரைச் சோ்ந்த 35 வயது இளைஞா், தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள துவரங்குறிச்சியைச் சோ்ந்த 55 வயது நபா் குணமடைந்ததைத் தொடா்ந்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இவா்களுக்கு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி கரோனா சிறப்பு அலுவலா் குமுதா லிங்கராஜ், முதல்வா் (பொ) சு. மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலா் செல்வம் உள்ளிட்டோா் பழங்கள், விடுவிப்புச் சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 71 ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com