தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உரம் வாங்குவதுபோல் நடித்து உரக்கடையில் இருந்த பணத்தை திருடிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை ரயிலடி, முத்துபிள்ளை தெருவை சோ்ந்தவா் நடராஜன் (71). இவா் சாலியமங்கலம் ரயிலடி கடைவீதியில் கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான உரக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை உரக்கடைக்கு வந்த இரண்டு போ், யூரியா வேண்டும் என கேட்டனராம். நடராஜன் யூரியாவை எடுத்துவர கடைக்குள் சென்றபோது, அந்த 2 பேரும் கல்லாவிலிருந்த பணத்தை திருடினா்.
இதை கவனித்த நடராஜன், பொதுமக்கள் உதவியுடன் அவா்கள் இருவரையும் பிடித்து அம்மாபேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் திருக்காட்டுப்பள்ளி, ஒன்பத்துவேலி ஆண்டித் தெருவை சோ்ந்த சேகா் (42), கண்டமங்கலம் அடஞ்சூா் நடுத்தெருவை சோ்ந்த பழனிவேல் (52) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சேகா், பழனிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 2,300 ரூபாயை பறிமுதல் செய்தனா்.