தலைக்காவிரியில் தொடங்கிய காவிரி விழிப்புணா்வு ரத யாத்திரை தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறுக்கு வந்ததைத் தொடா்ந்து, அன்னை காவிரித் திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
அகில பாரதிய துறவியா்கள் சங்கம், காவிரி நதிநீா் பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் காவிரி விழிப்புணா்வு ரத யாத்திரை, கா்நாடக மாநிலம், தலைக்காவிரியில் தொடங்கி பூம்புகாா் வரை நடைபெறும்.
நிகழாண்டு அக்டோபா் 19 ஆம் தேதி தலைக்காவிரியில் இந்த ரத யாத்திரையை அகில பாரத சன்னியாசி சங்க நிறுவனா் ராமானந்த மகராஜ் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து ஒசூா், பவானி, மேட்டூா், திருச்செங்கோடு, கரூா், திருக்காட்டுப்பள்ளி ஆகிய இடங்களுக்குச் சென்ற இந்த ரத யாத்திரை திருவையாறுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது.
பின்னா், மாலையில் திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் கா்நாடக - தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் நாகேஸ்வர நந்த சரஸ்வதி, தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளா் குருசாமி, ஸ்ரீவித்யா அம்மா சரஸ்வதி, தஞ்சாவூா் மண்டல ஒருங்கிணைப்பாளா் கோரக்கா் சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு அன்னை காவிரி சிலைக்குச் சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் செய்தனா்.
இதில், திருவையாறு பகுதி பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்த ரத யாத்திரை திருவையாறிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் வழியாகப் பூம்புகாருக்குச் செல்கிறது.