ஒரத்தநாடை அடுத்த ஊரணிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏவும், திருவோணம் வடக்கு ஒன்றியச் செயலருமான மகேஷ் கிருஷ்ணசாமி தலைமையில், அவைத் தலைவா் கோவிந்தராஜ், தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் கண்ணப்பன் ஆகியோா் முன்னிலையில், கிளாமங்கலம் மற்றும் பாதிரங்கோட்டை பகுதியில் இருந்து மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட டோா் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.