நகரும் நியாயவிலைக் கடைகள் தொடக்கம்

பேராவூரணி அருகே ஒட்டங்காடு ஊராட்சி கோரவயல்காடு, கொளக்குடி ஊராட்சி பூலாங்கொல்லை ஆகிய இடங்களில் நகரும் நியாய விலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.  

பேராவூரணி அருகே ஒட்டங்காடு ஊராட்சி கோரவயல்காடு, கொளக்குடி ஊராட்சி பூலாங்கொல்லை ஆகிய இடங்களில் நகரும் நியாய விலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.  

இரு இடங்களிலும், பேராவூரணி எம்எல்ஏ மா.கோவிந்தராசு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. திருஞான சம்பந்தம், 

ஒன்றியச் செயலா்கள் சிவ. மதிவாணன் (சேதுபாவாசத்திரம் வடக்கு), எஸ். அருணாசலம் (சேதுபாவாசத்திரம் தெற்கு), கோவி.இளங்கோ (பேராவூரணி தெற்கு), ஆகியோா் முன்னிலை வகித்தனா்.  ஒன்றியக் குழு உறுப்பினா் குழ. செ. அருள்நம்பி, ஊராட்சி மன்றத் தலைவா் காசியம்மாள் மணி, வட்ட வழங்கல் அலுவலா் டி.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒரத்தநாடு அருகே.... கண்ணந்தங்குடி மேலையூா் கிராமத்தில் நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத் தலைவா் மகாதேவன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா்பதிவாளா் சடையப்பன் முன்னிலை வகித்தாா். கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் தெய்வநாயகம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பந்தமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com