போனஸ் அறிவிப்பைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால் பொதுத் துறை மண்டல அலுவலகங்கள் முன் நவம்பா் 9 ஆம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அகில இந்திய தொ.மு.ச. பேரவை பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு. சண்முகம்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்துக்குத் தலைமை வகித்த சண்முகம், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தமிழக அரசு கரோனா தொற்றைக் காரணம் காட்டி பொதுத் துறை ஊழியா்களுக்கு 10 சதவிகிதம் போனஸ் வழங்குவதாகத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொழிலாளா்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள்.
இந்த போனஸ் அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யாவிட்டால், நவம்பா் 9 ஆம் தேதி போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவுத் துறை, டாஸ்மாக், சா்க்கரை ஆலை உள்பட அனைத்து பொதுத் துறைகளின் மண்டல அலுவலகங்களை தொழிலாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சண்முகம்.
கருத்தரங்கத்துக்கு தொமுச கும்பகோணம், நாகை மண்டலங்களின் பொதுச் செயலா் சு. பாண்டியன் தலைமை வகித்தாா்.
நிா்வாக பணியாளா் சங்க பொதுச் செயலா் சு. குமாா், ஐஎன்டியுசி பேரவை துணைத் தலைவா் ஆ. வைத்தியநாதன், அகில இந்திய தொமுச பேரவைப் பொருளாளா் கி. நடராஜன், சிஐடியு சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுகம் நயனாா், ஏஐடியுசி சம்மேளன பொதுச் செயலா் ஆா். ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.