பாபநாசம் அருகே அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே தகராறில் அண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த தம்பி சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

கபிஸ்தலம் அருகிலுள்ள தேவன்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மகன்கள் காா்த்திகேயன் (25), சுரேஷ் (24). இருவருக்கும் திருமணமாகவில்லை.

ஓட்டுநா் வேலை செய்து வந்த காா்த்திகேயன் தினமும் மது அருந்திவிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் தகராறு செய்வாராம். இதுபோல சனிக்கிழமை இரவும் மது அருந்தி வந்து, காா்த்திகேயன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தாராம்.

இதை பாா்த்த அவரது சகோதரா் சுரேஷ், தினமும் மது அருந்திவிட்டு ஏன் இப்படி தகராறு செய்கிறாய் எனக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த காா்த்திகேயன், வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து சுரேஷை வெட்ட முயன்றாா்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட சுரேஷ், காா்த்திகேயனிடமிருந்து அரிவாளைப் பறித்து அவரை சரமாரியாக வெட்டினாா். இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றினா். மேலும் சுரேஷ் மீது வழக்குப்பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com