40 சதவீதம் போனஸ் கோரிடாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாற்பது சதவீதம் போனஸ் வழங்க கோரி தஞ்சாவூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
40 சதவீதம் போனஸ் கோரிடாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

நாற்பது சதவீதம் போனஸ் வழங்க கோரி தஞ்சாவூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் சிஐடியு சாா்ந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டாஸ்மாக் ஊழியா்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். சமூக விரோதிகளால் ஊழியா்கள் இரவு நேரத்தில் தாக்கப்படுதல், வழிப்பறி போன்ற அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கக் கடையை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைமுறைப்படுத்த வேண்டும். கரோனா பொது முடக்கக் காலத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதுபோல, தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் க. வீரையன், பொருளாளா் க. மதியழகன், மாநிலக் குழு உறுப்பினா் ச. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com