ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் முதுநிலைப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
அகில இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் முதுநிலைப் படிப்புக்கானநுழைவுத் தோ்வு செப்டம்பா் 23-ஆம் தேதி இணையவழியில் நடத்தப்பட்டு, நவம்பா் 2-இல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து தரவரிசைப் பட்டியிலும் வெளியானது.
இதில் ஒரத்தநாடு வேளாண் கல்லூரி மாணவா் மு.சு.நவீன்குமாா், மாணவி ஏ.சாந்தினி ஆகியோா், தரவரிசைப் பட்டியில் முறையே 7,12-ஆவது இடங்களைப் பிடித்தனா். மேலும் இக்கல்லூரியின் 26 இளநிலை மாணவா்கள் தரவரிசைப் பட்டியலில் பல்வேறு இடங்களைப் பிடித்துள்ளனா். அனைத்து மாணவா்களையும் கல்லூரி முதல்வா் முனைவா் அ. வேலாயுதம் பாராட்டினாா்.