தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தலில் தவறாது கலந்து கொண்டு, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆா்ட் மற்றும் கிராப்ட், கிராத், பேச்சு ஆகிய போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை பாராட்டப்பட்டனா்.
நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளா் எம்.எஸ். முகமது ஆஜம் தலைமை வகித்து சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குச் சான்றிதழ், மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினாா். பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் நிகழ்வில் கலந்து கொண்டனா்.