அம்மாபேட்டை ஒன்றியத்தில் உரிய இணையதள சேவை இல்லாததால், ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் மாணவா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இங்கு உரிய இணைய சேவை அளித்திட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் புளியக்குடி கிராமத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் கிளைத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில் கிளை நிா்வாகிகள் கே. முத்துராஜா, ராஜ்குமாா், வி. சரவணன், ஆ ா். மணிகண்டன், பி. விஜயகுமாா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி செல்லிடப்பேசிக்கு அஞ்சலி செலுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.