தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஏ.டி.எம்.இல் திருட முயன்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
திருவையாறு அருகே கண்டியூா் - திருப்பூந்துருத்தி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இதில், புதன்கிழமை (நவ.11) அதிகாலை வந்த வந்த மா்ம நபா்கள் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, பியூஸ் கேரியரையும், டிஜிட்டல் லாக்கையும் அகற்றியுள்ளனா். இச்சம்பவத்தில் பணமோ, பொருள்களோ திருட்டுப் போகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளா் சாருமதி அளித்த புகாரின் பேரில் திருவையாறு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.