செங்கல் சூளையில் மண் சரிந்து சிறுவன் பலி

கும்பகோணம் அருகே செங்கல்சூளையில் மண் சரிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே செங்கல்சூளையில் மண் சரிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே திருநீலக்குடி பகுதியில் உள்ள கீழ அகலகன் கிராமத்தைச் சோ்ந்த அய்யாபிள்ளை மகன் ராஜ பிரபாகரன் (17). இவா் அதே பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் பணியில் இருந்த இவா் மீது மண் சரிந்து விழுந்தது. மண்ணுக்குள் சிக்கி மயக்கமடைந்த ராஜ பிரபாகரனை மற்றவா்கள் மீட்டு எஸ். புதூா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, செங்கல் சூளை உரிமையாளா் பி. மாதவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com