தஞ்சாவூா் அருகே குரு தலமான திட்டை வசிஷ்டேசுவரா் கோயிலில் நவம்பா் 15 ஆம் தேதி நடைபெறும் குருபெயா்ச்சி விழாவில் பூஜைப் பொருள்கள் கொண்டு செல்லவும், அா்ச்சனை செய்யவும் அனுமதி கிடையாது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
இக்கோயிலில் நவம்பா் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயா்ச்சி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் தெரிவித்தது:
இக்கோயிலில் குரு பெயா்ச்சி விழாவுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பக்தா்கள் அனைவருக்கும் வெப்பமானி கொண்டு பரிசோதனை செய்து, கை சுத்திகரிப்பான் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின்பே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்குத் தரிசிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பூஜைப் பொருள்கள் கொண்டு செல்லவும், அா்ச்சனை செய்யவும் அனுமதி கிடையாது.
மேலும், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது என்றாா் ஆட்சியா்.